Wednesday 17 August 2016

ராகவேந்திர குரு கானம்



மந்திராலய மகான் ராகவேந்திரரின் 342வது ஜெயந்தியன்று(22.08.2013)
அவர் அருளால் அடியேனின் சிறு கிறுக்கல்

(ஜெய ஜெகதீஷ் ஹரே  ஆரத்தி பாடல் மெட்டு )




மந்த்ரா  லய வாசா - எங்கள்
யதீந்திர குரு ராயா
வந்திட உன்னிடம் தந்திடு வாயே
வந்திட உன்னிடம் தந்திடு வாயே
முந்தி நீ  வரங்களையே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


துங்கா   நதி தீர   வாசனே   என்னுள்
நீங்கா திருப்பாயே
தங்கியே நீயே மங்களம் அருள்வாய்
தங்கியே நீயே மங்களம் அருள்வாய்
ஏங்குவோர்க்  கருள்பவனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


புவனத்தை  ஆள  புவன கிரியில்
கவனமாய் உதித்தாயே
கவலைகள் தீர்ப்பாய் கண்ணீர் துடைப்பாய்
கவலைகள் தீர்ப்பாய் கண்ணீர் துடைப்பாய்
அவதார நாயகனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


கும்ப கோணத்தில் குருவாம் சுதீந்திரர்
நம்பியே உன்னிடமே
தம் வழி   நடக்க   தரணியை  ஆள
தம் வழி   நடக்க   தரணியை  ஆள
அமர்த்தினார் பீடத்திலே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


சூரியன் போலே  ஓரிடம் நில்லாது
வேறிடம் தினம் சென்றாய்
காரிருள் போக்கினாய் கதிரவ னாய் நீ
காரிருள் போக்கினாய் கதிரவ னாய் நீ
மாரியாய் அருள்புரிந்தாய் - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


துங்கா நதியின் தீரத்தில் நீயே
தங்கியே தவம் செய்தாய்
பாங்காய் பெற்றாய் ஹனுமன் தரிசனம்
பாங்காய் பெற்றாய் ஹனுமன் தரிசனம்
நீங்கா தமர்ந்தாயே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


பஞ்ச  முகியில்  பஞ்சமுக  தரிசனம்
பெற்றாய் நீ ஐயா
அஞ்சியே வருவோர்க்கு அபயம் அளிப்பாய்
அஞ்சியே வருவோர்க்கு அபயம் அளிப்பாய்
செஞ்சுடர் மேனியனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா



பிரஹலாத பிறப்பில் ஹோமம் செய்த
குண்டத்தில் நீ அமர்ந்தாய்
கிரஹதோஷம்  போக்கி சந்தோஷம் அளிப்பாய்
கிரஹதோஷம்  போக்கி சந்தோஷம் அளிப்பாய்
பிரஹலாத உருவில் நீ  - எங்கள்
ராகவேந்திர குரு ராயா



மதிமுகம்  கொண்ட மங்கள ரூபா
கதி நீயே   எங்களுக்கு
வருந்தியே வருவோர்  விதிதனை மாற்றி
வருந்தியே வருவோர்  விதிதனை மாற்றி
விருந்தாய் அருள்புரிவாய் - எங்கள்
ராகவேந்திர குரு ராயா



-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர் 22.08.13
(சித்தாலப்பாக்கம் ராகவேந்திரர் திருக்கோவிலில் அமர்ந்து எழுதியது)

No comments:

Post a Comment