Monday 26 October 2015

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக பாடல்



ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக பாடல்
(பிரம்ம முராரி - மெட்டு)

ஐப்பசி பௌர்ணமி நாளில் நாமே
நம்பசி போக்கும் அன்னத்தால் சிவனை
காப்பிட்டு  வணங்கி அருள் பெறுவோமே
கூப்பி கை தொழுதிட குறைகள் தீரும்

அரியும் சிவனும் அரிசியாய் மாறி
அரிதான நோயாம் பசியை தீர்த்திட
அரிசியால் அன்னத்தை படடைத்தே நாமே
ஹரி சிவன் அருளை அளவின்றி பெறுவோம்

பஞ்ச  பூதப் பொருளாம் அரிசியை
பஞ்ச  பூத  தலைவன் சிவனுக்கு
பஞ்சாட் சரத்தை பாங்காய் ஓதி
வெஞ்சோற்றை சாற்றி வினைகள்அறுப்போம்

நெல்லை வடித்து அன்னமாய் மாற்றிட
நெல்லின் பிறவி முடிதல் போல
பல் பிறப்பின்றி பரகதி அடைந்திட
நெல் அன்னம் படைத்தே பலபிறப் பறுப்போம்

லிங்க வடிவான அரிசியின் அன்னத்தால்
லிங்கரூப  சிவனை அலங்காரம் செய்வோம்
கோடிலிங்க தரிசன பலனை பெறுவோம்
கூடிலிங்க ரூபனை போற்றியே மகிழ்வோம்

அன்னம் பாலிக்கும் தில்லை நடராசன்
எண்ணம் அறிந்து ஏற்றங்கள் அருள்வான்
திண்ணமாய் அருள்வான் வண்ணமாய் வாழ்வே
முன்ஜென்ம வினைதீர்த்து முக்தியும் அருள்வான்

அன்னத்தால் சிவனை அலங்காரம் செய்தே
எண்ணத்தில் இருத்திட ஏற்றங்கள் பெறுவோம்
அன்னம் குறைவின்றி அனுதினம் கிடைக்கும்
எண்ணம் நிறைவேறும் ஈசனின் அருளால்

பஞ்சம் பட்டினி இன்றியே வாழ
நெஞ்சம் மகிழ்ந்தே அன்னம் படைப்போம்
தஞ்சம் என்றே தலைவன் தாள்பற்ற
அஞ்சும் நெஞ்சில் ஆறுதல் பெறுவோம்

முழுநிலா நாளில் முழு மனதோடு
பழுதிலா பக்தியால் பணிவோம் சிவனை
வழுவிலா வாழ்வை வழங்கிட சிவனே
முழு நிலா பொலிவோடு  முகம் மலர்வோமே
           

                                          -தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்

Wednesday 20 May 2015

SANKARANANDHAM 121 SONGS PDF


With the help of the following link, u can view the 121 songs of SANKARANANDHAM, released on 121st Jayanthi day (12.06.2014).


https://docs.google.com/file/d/0Byv9i1ZsgdBHd05wcEdVSGxEbFU/edit

Thursday 14 May 2015

சங்கரானந்தம்


மஹா பெரியவாளின் அருட்கடாட்சத்தினால் 30.12.12 முதல் இன்று வரை இச் சிறியேனுக்கும்  அருள் செய்யும் பொருட்டு என்னை எழுதுகோலாக பயன்படுத்தி 350க்கும் மேற்பட்ட பாடல்களை எழுத அருள் புரிந்துள்ளார்.   ப்பாடல்களை சங்கரானந்தம் என்னும் தலைப்பில் மஹாஸ்வாமிகளின் பேரருளால் இது நாள் வரை 35000 பிரதிகள் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு வழங்கி மகிழும் வாய்ப்பினை அளித்துள்ளார் .

தற்போது மஹாஸ்வாமிகளின்   122வது ஜெயந்தி நாளான வைகாசி அனுஷத்தில் (ஜூன் 2 ), 27 பாடல்களை புத்தக வடிவில் 10,000 பிரதிகள் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு  வழங்கி மகிழ மஹாஸ்வாமிகளின் பாதார விந்தங்களை பணிந்து ஆசி கோருகிறேன். 
  
 மஹா பெரியவாளின் பக்தர்களாகிய தாங்களும் இப்பெரும் புண்ணிய பணியில் ஈடுபட விரும்பினால் குறைந்த பட்சம் தலா ரூ.108 அனுப்பினால் கூட போதும்.    தங்களுக்கு இது வரை வெளிவந்துள்ள சங்கரானந்தம் 3 தொகுதிகளுடன் இந்த தொகுப்பையும் சேர்த்து தபாலில் சேர்ப்பிக்கிறேன். அதிக அளவில் அச்சு விலையில் புத்தகங்களை பெற்று தங்களது வட்டத்தில் விநியோகிக்க விரும்பும் அன்பர்களும் அலை பேசியில் அணுகவும்.






BANK ACCOUNT DETAILS :





S. THANUJA
INDIAN BANK
RAJAKILPAKKAM CHENNAI - 73.
A/C. NO. 792752550
IFSC Code: IDIB000R053



L. SHANKAR
STATE BANK OF INDIA
TAMBARAM BRANCH , CHENNAI 45.

A/C NO. 10565278389
IFSC Code: SBIN0001243

For those who wish to contribute to SHANKARAANANDHAM book to be released on June 2nd., 2015
pls contact :

L. SHANKAR   99404 47 437 ,  98847 18 324
( 8  to  10 pm.  only  please) 

104 ARAVIND NAGAR , MADAMBAKKAM, CHENNAI - 126.

For Higher amounts,  Cheque may also be given in the name of 
M/s.Frontline Printers , Guindy.

Those who paid in bank, 
Pls send your address (for sending book) to  madambakkamshanks@yahoo.com


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

KARUNAA SAAGARA KAANJI MAAMUNI GAANAM


anusha naatharukkor anandha gaanam


mahaswami mahimai song - aiygiri nandhini mettu


Thursday 1 January 2015

குறை தீர்க்கும் குரு பக்தி கானம் 01.01.2015

புத்தாண்டின் முதல் பாடல்

குறை தீர்க்கும் குரு பக்தி கானம்


சந்திர சேகர குருவை - தினம்
சிந்தித்தே மனம் மகிழ்வோம்
வந்த துன்பம் விலகும் - மனம்
எந்த நாளும் மகிழும்


மந்த மனமது மாறிட - நாம்
வந்த வினை தனை தீர்த்திட
எந்த நாளும் குருவை - நாம்
சந்ததம் துதித் திடுவோம் (சந்திர சேகர குருவை. . .)

பந்த பாசத்தை போற்றி - நம்
சொந்த பந்தங்கள் கூட்டி
எந்த நாளும் மகிழ்வோம் - நம்
சிந்தையில் சிவம் உணர்வோம் (சந்திர சேகர குருவை. . .)

அந்தி மாலையும் காலையும் - நாம்
முந்தி வணங்கவே சி(முதல்)வனை
வந்த வினைகள் வாடும் - நாம்
நொந்த நினைவுகள் ஓடும் (சந்திர சேகர குருவை. . .)

செந்தணல் யாகம் வளர்த்தே - நாம்
அந்தணர்க் களிப்போம் விருந்தே
சிந்திய கண்ணீர் யாவும் - தினம்
ஆனந்த கண்ணீராய் மாறும் (சந்திர சேகர குருவை. . .)

சந்திர சேகர குருவை - தினம்
சிந்திக்க தித்திக்கும் மனமே
வந்த துன்பம் விலகும் - மனம்
எந்த நாளும் மகிழும்
-தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர். 01.01.2015
Those who copy and paste/fwd , kindly copy the author's name and  blog id also...