Saturday 15 December 2012

இறையருளால் அடியேனின் 200 வது பாடல்

இறையருளால்  அடியேனின் 200 வது பாடல்

18.06.12  to  15.12.12

(ஜெய் ஜெகதீஷ் ஹரே  - ஆரத்தி பாடல் மெட்டு )


ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
சத்குரு ஸ்ரீ சாயி
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
சத்குரு ஸ்ரீ சாயி - ஓம்
சத்குரு ஷீர்டி சாயி

அதிகாலை வேளையிலே சாயி உன்
துதி பாடி மகிழ்ந்திடவே
கதி நீயே என்று சரண் அடைந்தோமே
விதி தனை மாற்றிடுவாய் - ஓம்
ஷீரடி சாயி நாதா


ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
சத்குரு ஸ்ரீ சாயி
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
சத்குரு ஸ்ரீ சாயி - ஓம்
சத்குரு ஷீர்டி சாயி


கமலம் உன் கண்களே  காருண்யா ரூபனே
கண் போல்  துணை நீயே
கார் மேகம் உந்தன் கருணை விழிகள்
கண் கொண்டு பார்ப்பாயே
கண் இமையாய் காப்பாயே

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
சத்குரு ஸ்ரீ சாயி
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
சத்குரு ஸ்ரீ சாயி - ஓம்
சத்குரு ஷீர்டி சாயி

பொற்  பாதம் கண்டதும் - வாழ்வில்
அற்புதம் நிகழ்ந்திடு  மே
சொற்களால் உன்னை போற்றி பாடிட
பற்பல வரம் அருள்வாய்
பற்றுகள் அற்றவனே

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
சத்குரு ஸ்ரீ சாயி
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
சத்குரு ஸ்ரீ சாயி - ஓம்
சத்குரு ஷீர் டி சாயி

-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர் 15.12.12